புதன், 3 மே, 2023

சுஜாதா

 




சுஜாதா

.................................................ருத்ரா.

தமிழ் எழுத்துக்குள்

பூலியன் அல்ஜீப்ராவின்

பூதம் காட்டி

புல்லரிக்க வைத்தவன்.

கணினிகள் இங்கு

கண்விழிக்காத போதே

இவன் சிறுகதைகள் நமக்கு

மடிக்கணினிகளாகிப் போயின.

மடி வாசனையற்றதாய்

அக்கிரஹாத்துக் காற்றையும்

அலசித்தந்தவன்  இவன்.

இவன் படைப்பில் அந்த

ஊஞ்சல் எனும் சிறுகதையின்

கிரீச் ஒலிகள்

ஆயிரம் ஞானபீடங்களை

தனக்குள் இன்னும்

அடைகாத்துக் கொண்டிருக்கின்றன.

...............................................................


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக