செவ்வாய், 30 மே, 2023

அகழ்நானூறு 44

 

அகழ்நானூறு  44

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____________________________________சொற்கீரன்


குடந்தை செவிய குறுமுயல் தழீஇய‌

சிலம்பி சிறையினம் சில் ஒலி கூர‌

பளிக்கின் அன்ன படர்நிழல் முன்றில்

புல்வாய் மிதிபடு சீறடி தோறும் அவள்

சிற்றடி ஒற்றிய பொறிபடு எல்லின் 

வலைக்கண் வடிக்கும் வயமான் வெற்ப!

விசைத்த வில்லர் கொடுவரி உழுத 

கொல்சுரம் இறந்தும் கொன்னே சிவப்போள்

கள்ள நகையும் களிபிறங்கு கலித்த‌

கல்பொரு அருவி மணிப்பெயல் மாய்ந்து

உவக்கும் ஒருபால் அத்தம் சேர‌

ஊர்ந்தனை என்கொல்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக