திங்கள், 5 செப்டம்பர், 2022

ஓட்டை

 அந்த சிலேட்டுப்பலகையில்

கரிக்குச்சி கொண்டு

எழுதி வாசித்துப்படித்தோம்.

அந்தப்பலகையின் ஓரத்துக்கீறலில்

ஒரு நாள் 

ஒட்டியிருந்த துண்டும் உடைந்தது.

அதனால் திறந்த சன்னலில்

புதிதாய் எல்லாம் புரிந்தது.

சிலேட்டின் அந்த பக்கம்

அகர முதல புரிந்தபோது

இந்தப் பக்கம் 

நம் ஓட்டைச்சமூகமும்

புரிந்தது.


__________________________________________‍

ருத்ரா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக