புதன், 26 ஜனவரி, 2022

கூர்மை கொள் தமிழா!

 கூர்மை கொள் தமிழா!

‍‍‍‍‍‍‍________________________________

ருத்ரா


தமிழா!.

எப்போ பார்த்தாலும் தமிழ் தானா?

கொஞ்சம் பிழைக்குறத பாருங்கப்பா.

என்று தமிழர்களே

முதுகு திருப்பிக்கொள்ளும் அவலங்களுக்கு

ஒரு சாட்சி இதோ!

ஆர்.பி.ஐ அலுவலக குடியரசு தினவிழா நிகழ்ச்சிக்கு

பாடப்பட்ட நம் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுக்கு

சட்டைசெய்யாத ஒரு ஊழியர்.

இதற்கு அலட்சியம் ஒரு காரணம்

இது "மத்ய அரசு அலுவலகம் தானே"

என்பது தான் அது.

அந்த அலட்சிய அகம்பாவம் ஒரு நோயாக மாறி

சமூக நீதி தேவைப்படுகிற

நம் மக்கள் இப்படி தமிழ் மீது அலர்ஜி ஏற்படுத்திக்கொள்ள‌

காரணம் ஆகி விடும் ஒரு ஆபத்தான் காரணமும்

கண்ணுக்குத்தெருயாத ஒரு 

அனகோண்டா பாம்பாய் நம்மை 

விழுங்கக்காத்திருக்கின்றன.

நமக்கு எச்சரிக்கை மிக மிக தேவை.

இப்போது திருக்குளை நம் மூக்குக்கு முன்னே

காட்டி கிச்சு கிச்சு மூட்டுவார்கள்.

காவியும் கொட்டையையும் சேர்த்துக்கொண்டு.

அந்த கனமான செத்த பிணமான சமஸ்கிருதம்

நம்மை இன்னும் அழுத்தி வதைப்பது தான்

நமக்கு இன்னொரு சுதந்திரப்போருக்கு

அவசியத்தை மூண்டு எரியச்செய்கிறது.

உலகமொழி ஆங்கிலம் நம் தமிழின்

முகவரி காட்டுவது.

சமஸ்கிருதமோ நம் முகத்தையே

அழித்துக்கொண்டிருப்பது.

தமிழர்களே இந்த நுண்மையான ஓர்மை

நமக்குள் கனன்றால் தான் 

சநாதன அதர்ம வர்ணங்கள்

நம்மை மத்தாப்புக்கொளுக்தி

மடிய விடாமல் தடுக்கும்.

தமிழா! தமிழா! கூர்மை கொள்.


___________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக