வியாழன், 30 ஜனவரி, 2020

ரஜினியும் இமயமலையும்

ரஜினியும் இமயமலையும்
========================================ருத்ரா


பெரியாரை
"பெரியவா"க்கள்
கொச்சைப்படுத்த‌
டப்பிங்க் குரல் கொடுத்தவர்
குருமூர்த்தி.
வாயசைத்தவர் ரஜினி
மன்னிப்பும் கேட்கமாட்டேன் 
என்று சொல்லும் அளவுக்கு
ஆரியம் முறுக்கி விட்ட‌
அந்த 
தந்திரப்பொம்மை தான் 
ரஜினி.
மனித சமூகநீதியின்
விளைநிலமாக உள்ள‌
நம் திராவிட சமுதாயத்தை
அழிக்க வந்த இந்த‌
இந்த அரிதார "எந்திரனை"
அடித்து நொறுக்குவதே
தமிழனின் கடமை.
அதற்காக‌
ரஜினியை இமயமலைக்குப் போ
என்று ஆவேசப்பட வேண்டாம்
ஓ! தமிழர்களே.
அந்த இமயம் கூட‌
தமிழ் விழித்திருக்கும் இமையம்.
நம் சேரன் வில் பொறித்த‌
அடையாளம் அல்லவா அது !
ரஜினியை வைத்து 
நம் இமய மலையைக்கூட‌
கொச்சைப்படுத்த அனுமதிக்கலாமா?
சிந்துவெளித்தமிழர் அல்லவா நாம்!
சிந்தி தமிழா!சிந்தி!
சிந்தியா எனும் நம் இந்தியாவை
அந்த ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து
காப்பாற்றுவதே நம் 
புதிய வரலாற்றுக்கடமை.
சி ஏ ஏ மற்றும் என் சி ஆர் எல்லாம்
நமக்கு வெட்டும் புதை குழிகளே!
ஒன்று சேர் தமிழா!
இது வெறும் சமஸ்கிருத எதிர்ப்பு அல்ல.
அவர்கள் ஆதிக்க சதியில்  புதைந்து கிடக்கும்
நம் வரலாற்றை மீட்டெடுப்போம்.
தஞ்சசைப்பெருங்கோயில் 
தமிழன் இதயம் அல்லவா.
அதன் குடமுழுக்கு
தமிழின் பாற்கடலில் அல்லவா
நிகழ வேண்டும்.
சம்ஸ்கிருத நச்சு நீரா
அங்கே நனைக்க வருவது?
இது வரை அப்படித்தான் என்று 
சுரண்டியவர்களை 
சுடுகாட்டுக்கு அனுப்புவதே 
இனி நம் வேலை .

வாழ்க நம் செந்தமிழ்!
வெல்க நம் தொல் தமிழ்!

========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக