வியாழன், 10 ஜனவரி, 2019

அரக்குமாளிகை.


அரக்குமாளிகை.
=======================================ருத்ரா


மாயமில்லை.
மந்திரமில்லை.
மோடி மஸ்தான்
வித்தையும் இல்லை.
வாருங்கள் எல்லோரும்.

தமிழகத்தில் யாருடனும்
கூட்டணியில்லை.
தமிழகத்தில்
கூட்டணியின் கதவுகள்
திறந்தே கிடக்கின்றன.

ஏதாவது புரிகிறதா?

கதவு திறந்தே கிடக்கிறது.
எதிலிருந்து எதற்குள் போக‌
அது திறந்து கிடக்கிறது?
அதற்கு
உள்ளும் இல்லை
வெளியும் இல்லை.
ஏனெனில்
அங்கு வீடே இல்லை.
கதவுகள் மட்டும் செய்து மாட்டி
திறந்து வைத்திருக்கிறார்கள்.

இந்த அரக்குமாளிகைக்குள்
போகாமலேயே
நெருப்பு பற்றிக்கொள்ளும்
அபாயத்தை
தந்திரமாக நிர்மாணிக்கும்
பழைமை வாதிகளின்
பசப்பல்களில்
எழுதப்பட்ட மகாபாரதம் இது.

ஓட்டுகளில் நடைபெறும்
இந்த குருக்ஷேத்திரம்
சாதி மதங்களின்
மரண வியூகங்களை
மடக்கிச்
சுருட்டி வைத்துக்கொண்டிருக்கிறது.
துச்சாதனர்கள் வருகிறார்கள்.
மக்களே உங்கள்
ஜனநாயகம் எனும்
கற்பை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

=====================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக