புதன், 3 அக்டோபர், 2018

விஜய்யின் ஒருவிரல் புரட்சி !

விஜய்யின் ஒருவிரல் புரட்சி !
========================================ருத்ரா

வெறுமே சிரிப்பு மூட்ட வந்த‌
ஒரு விரல் கிருஷ்ணாராவ் இல்லை
விஜய்!

அந்த தொலைக்காட்சி விழா
கணிப்பொறி தட்டி தட்டி
நம் தலைவிதியை
தொலைத்துக்கொண்டிருக்கும்
நம் "ஒரு விரலில்"
எரிமலைக்குழம்பைத்தடவி
எழுச்சி கொள்ள வைத்திருக்கிறது.
விஜய் சொன்ன குட்டிக்கதைக்குள்
புரிகிறது
ஒரு "எலக் ஷன் மேனிஃ பெஸ்டோ!"

அரசனுக்கு இல்லாததா!
எடுத்துக்கொள்ள வேண்டியது தான்
என்பது
அந்த "உப்புக்கதையில்"
தோலுரித்துக்காட்டப்படுகிறது.
"எட்டுவழிப்பாதையில்"
பசுமையான கிராமங்கள்
பலியிடப்படுவதன்
உருவகக் கதை தானே அது.

அந்த உப்புக்கதையில்
உப்புக்கரிக்கும் வியர்வைக்கடல்களின்
கொந்தளிப்பு  ஒலி நன்கு கேட்கிறது!

விஜய் இங்கே முழங்குகிறார்.
அரசியல் என்பது
அர்த்தம் இல்லாத சொல் ஆகிவிட்டது.
அரசியல் மெர்சல் ஆவதும்
மெர்சல் அரசியல் ஆவதும்
நடைமுறை ஆகிவிட்டது.
அலுவலகங்களும்
அர்த்தங்களை இழந்து விட்டன.
பிறப்பு சான்றிதழ் வேண்டுமென்றால்
வைக்க வேண்டியதை  வையுங்கள்.
வேண்டாம் என்றால் போங்கள்
பிறக்காமலேயே இருந்துவிட்டுப்போங்கள்.
யார் வேண்டாம் என்றது?
அது போல் தான்
இறப்பு சான்றிதழ் !
இறக்காமலேயே இருந்துவிட்டுப்போங்கள்
யார் வேண்டாம் என்றது?
அந்தப்படத்தில்
நான் முதலமைச்சராக நடிக்கவில்லை.
ஆனால் நிஜத்தில்
முதலமைச்சராக  நான் நடிக்க மாட்டேன்
என்றார் விஜய்.

அவை வெறும்
பஞ்ச் டயலாக்குகள் இல்லை.
கணிப்பொறிகள் எல்லாம்
விஸ்வரூபம் எடுத்து
அந்த அரங்கத்தில்
காத்திருந்தன போல் இருந்தன
அந்த "ஒரு விரல்" மாஜிக்கில்
மாற்றங்களின் புயல் வீச !


சர்க்காரின் அனாடமி இது தான்
என்று
சாட்டையடிகளாய்
அந்த லேசர் காடுகளின் மேடையில்
சொற்களை
உணர்ச்சிக் காடுகள் ஆக்கினார்
விஜய்.

"சர்கார்" அமைத்துவிட்டு
கேட்கின்றோம்.
"போடுங்கள் உங்கள் ஓட்டுகளை
இந்த படத்துக்கு"
என்கிறார் விஜய்.
ஆம்..
இவை தியேட்டர் கனவுகள் தான்.
செட்டிங் போராட்டங்கள் தான்.
ஆனால்
மக்களின் சோகங்களின்
தீயில் பற்றிக்கொண்ட
இக்கனவுகள் நிஜமே.

================================================















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக