வியாழன், 23 ஆகஸ்ட், 2018

சிம்பு செய்த‌ வம்பு


சிம்பு செய்த‌ வம்பு
============================================ருத்ரா

சமீபத்திய‌
ஆனந்த விகடன் இதழ்களில்
சிம்பு என்ற இந்த சிலம்பு
பரல்களை உடைத்து
தெறித்திருக்கிறது.
அவை மாணிக்கபரலும் அல்ல‌
முத்துப்பரலும் அல்ல.
சும்மா
கிசு கிசுக்களுக்கு
எதிர் கிசு கிசுக்கள்.

பீப் பாடல்கள்
ஏதோ இவர் சொன்ன மாதிரி
கொலைக்குற்றப் பட்டியலில் எல்லாம்
சேர்க்கப்பட வேண்டியதில்லை தான்.

இருந்தாலும் அந்தப்பாடல்களின்
ஓட்டைகள் வழியே
ஒழுகும் சேறும் சகதியும்
சுத்தப்படுத்தப்படவேண்டும்
என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மேற்கத்திய இசை நாகரிகத்தின்
உச்சாணிக்கொம்பில் இருந்து
பாடப்பட்டவை
நம் உள்ளூர் மஞ்சள் குங்குமத்தோட்டத்துள்
அபஸ்வரமாய்த்தான்  இருக்கும்.
பிடிவாதமாய்
புள்ளிபோட்டு புள்ளிபோட்டுத்தான்
பாடுவேன் என்பது
தனிப்பட்ட சுதந்திர கீதமாக இருக்கலாம்.
ஆனால்
சமுதாய வரம்புக்குள் இருக்கும்
சமுதாய மனித பிம்பம்
சிதைக்கப்படச்செய்வது
ஒரு இசையின் நோக்கம் அல்ல.

இவை என் அந்தரங்க சொத்து.
இவற்றில் தலையிட யாருக்கும்
உரிமையில்லை
என்று முழங்கியிருக்கிறார்.
அது தெருமுனைக்கே வந்து விட்டது.
"வாஷிங் தி லினன் இன் தி பப்ளிக்"
என்பதையே மறுபடியும்
"வாஷிங் தி லினன் இன் தி பப்ளிக்"
என்பது போல‌
ஒரு விளம்பர யுத்தி தான் இது.

இந்த சில்லறைப்பேட்டிகள்
அவரை சிதறடித்து விடக்கூடாது.

சிம்பு சமீப காலப்படங்களில்
நடிப்பில் முத்திரைகள்
பதித்து வருகிறார்.
அவர் அதில் உயரங்கள் ஏறட்டும்.
புதிய சிகரங்கள் அடையட்டும்.

வாழ்த்துக்கள்.

=====================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக