வியாழன், 21 டிசம்பர், 2017

2ஜி

2ஜி
===================================ருத்ரா

திராவிடன் எனும்
சூரனின் சம்ஹாரம்
"சுப்பிரமணியன் சாமிகள்"மீது.

(ஒரு விளக்கவுரை)

(அதாகப்பட்டது...
சூரன் வடிவில் வந்த
சுப்ரமணியர்
சுப்ரமணியர் வடிவில்
வந்த  சூரனை
சம்ஹாரம் செய்கிறார்.)

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________

ஊடகங்கள் இப்போ
ஊசி குத்திய‌
பலூன்.

_________________________________

அம்மாவின் ஆன்மா
அந்த அம்மாவையே
மன்னிக்காது.

___________________________________

பத்தாண்டுகள் வரை
உடுக்கை
அடித்துக்கொண்டிருந்தவர்களுக்கு
"இஞ்சி தின்று கள்குடித்து
தேளும் கொட்டியது" போல் ஆனது.


‍‍‍‍‍______________________________________

சைஃபர்களை வைத்து சூதாடிய
சகுனிகளின் பாரதம் இது.
இந்த "சைஃபர்கிரைம்"
செய்தவர்களுக்கு
யார் தண்டனை கொடுப்பது?

_________________________________________

அண்ணா அவர்களே!
ஆரிய மாயை
ஆரிய சூழ்ச்சி
என்று எழுதிய‌
உங்கள் நுட்பம்
இன்று புரிந்தது.
இவர்கள் கொடி தூக்கியும் நீ..
இவர்கள் இடி தாக்கியும் நீ..
இன்றும்
இருக்கிறாய்
திராவிடத்தின்
திராவகக்குழம்பாய்!
அதனால்
எரிந்து
வீழ்ந்தது அநீதி.

_______________________________________________







2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

அம்மாவின் ஆன்மா மிகவும் ரசிக்க வைத்தது ஐயா.

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

அம்மா இருந்தபோது
ஆன்மாவைக் காணோம்.
ஆன்மா வந்த போது
அம்மாவைக் காணோம்.
இதுவே அரசியல்...
திரு கில்லர்ஜி அவர்களே

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக