பக்கங்கள்

செவ்வாய், 17 மார்ச், 2026

VANNADAASAN KAVITHAI/17.03.26

 

உடைந்த சிலேட்

_____________________________________

வண்ணதாசன் அவர்களே

அந்த உடைந்த கண்ணாடியில் 

தெரிந்த உங்கள் முகம்

உங்கள் உடைந்த சிலேட்டு

காட்டிய செந்தமிழ் உருவத்தின் 

சரித்திரமாக தெரிவது தானே

ஒரு உன்னத கவிதை வடிவம்.

உங்கள் கவிதைகளில்

முற்றுப்புள்ளிகளில் தான்

கவிதையின் அக்கினி கொழுந்து வீசிக்

காட்டும் முருகியல் வெளிப்படுகிறது.

அருமை வரிகள் அவை.

இப்படி ஒரு அழகியலில்

நம் தேச வறுமைக்கந்தலை

அழகாக காட்டியிருக்கிறார்

கி ரா அவர்கள்

வேட்டி எனும் சிறுகதையில்!

வேட்டியின் அந்தக்கிழிசல்

நம் தேசப்படம் வறுமையில் கிழிந்து

காட்டும் சரித்திரம் என்பதை

சொல்லாமல் சொல்லியிருப்பார்

கி ரா அவர்கள்.

இலக்கிய மேதைகளுக்கு

எழுதும் வரிகள்

அவர்கள் மடியில் புரளும்

பொம்ரேனியன்கள் தான்

அல்லது

உறுமும் சிங்கங்கள் தான்.

______________________________________

சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக