பக்கங்கள்

ஞாயிறு, 15 மார்ச், 2026

பரல் நானூறு....6

 


பரல் நானூறு.. 6

____________________________________________


திரிமருப்பு மாவென விண்ணுய் விழிதரு

நுதலாள் நோக்கின் கூர் அம்பு துளைக்க‌

அழல்சிறை அன்ன வெம்மை வேய்ந்த‌

விதிர்ப்புடன் இவனும் அவள் பால் ஒரு

கொய்சுவல் புரவி பாய்தரும் கலியொடு``

கதழ்பரிந்து ஆர்க்க தழுவல் அன்ன‌

தாகம் போர்த்த தகைவுடன் நவின்றது

கேட்டு ஆங்கு இடிஉமிழ் வான்போல்

வரி வரி பிளந்து உரைத்தாள் மன்னே.

பொன்னும் பொருளும் குவித்தீர் எற்கு ?

இவள் பொன்னுடல் தீயில் வெந்திடவோ?

இற்றவன் சொன்னான் இமிழ்தரு

அருவிப் பெயல் அன்ன பூவில் சொரிந்து.

பொருள்வயின் எதிர்க்கும் சூர்நிறைக்

காடு பூம் அத்தம் கடும்பரல் தூஉய்

கிடைப்படும் அலரிப்  பறந்தலை அன்ன 

ஆங்கு அவிர்தலைச்  செயிர்த்து 

அணைந்த காலை நின் முறுவல் அற்றே 

அணிக்குடை விரிக்கும் சுடு கதிர் 

எல்லனும் தண்ணிழல் தகையும்.

நம்மின் நெஞ்சம் நிறையும் படு 

நல்கூர் ஆங்கு வறளும் முற்றும்மே!

----------------------------------------------------------------





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக