வெள்ளி, 19 ஜூலை, 2019

குவாரன்டைன்

குவாரன்டைன்
===========================================ருத்ரா

ஒரு மதத்துக்காரர் 
இன்னொரு மதத்துக்காரரை
விமரிசிக்கப்புகுந்தவர்
"அவன் மூத்திரத்தைக்குடி
இவன் மூத்திரத்தைக்குடி"
என்று
அவருக்கு தெரிந்த
சாத்திரங்களையெல்லாம்
மூத்திரமாக்கிக்கொண்டிருந்தார்.
இந்த மின்தமிழ்ப்பக்கங்களில் எல்லாம்
இப்படி தமிழ் மணம் பரப்புவதன் மூலம்
எந்த மதத்தை அவர் பரப்ப முயல்கிறார்
என்பது
அவருக்கே தெரியுமோ தெரியாதோ
என்பதும் தெரியவில்லை.
உலகத்தில்
கை கண்ட மருந்து
பசு மூத்திரம் மட்டும் தான்
என்று
யாரோ ஒரு ஆர்யவைத்தியன் சொல்லியிருப்பான்
போலும்.
அந்த மூத்திரத்தை அவர்
அண்டா அண்டாவாய் குடித்தபின்னும்
அந்த மதவெறி அரிப்பு
இன்னும் போகவில்லை.
அதனால் வாயைத்திறந்தாலே
இப்படித்தான் சொரிய ஆரம்பித்து விடுகிறார்.
யாரைப்பார்த்தாலும்
மூத்திரத்தைக்குடிக்க சொல்லிவிடுவார்.
அவரைப்பிடித்து
ஏதாவது ஒரு
குவாரன்டைனில் அடைத்து வைக்கவேண்டும்.
இல்லாவிட்டால்
இந்த "இந்து" மகா சமுத்திரத்தையே
இந்து மகா "மூத்திரமாக்கி"விடுவார்
போலிருக்கிறது.

====================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக