பக்கங்கள்

புதன், 8 ஏப்ரல், 2026

ஜெயகாந்தன்

ஜெயகாந்தன்




"சில நேரங்களில் சில மனிதர்கள்"

ஆனால் எல்லா நேரங்களிலும்

இவர் எழுத்துக்களே எழுத்துக்கள்.

சமுதாயம் நீங்கள் பார்க்கிற‌

சமுதாயம் கிடையாது.

அதன் உள் ஓட்டத்தில் அது

நேர் எதிரிடையானது.

இந்த நுட்பமான தன்மையே

"சோசியல் ஃப்ராய்டிசம்" என்பது.

ஜெயகாந்தன் இந்த உள்சிற்பத்தை

உண்மையாக செதுக்கினார்.

மேலை நாட்டு சிந்தனை இலக்கியம்

நம் நாட்டு பம்மாத்து பக்தி இலக்கியங்கள் போல்

பதுங்கிப்படுத்துக்கொண்டு

அழிச்சாட்டியங்களில் வக்கிர வர்ணங்களுக்கு

சாமரங்கள் வீசியதில்லை.

அவை மனிதத்தை வெளிப்படுத்தில்

ஒளிவு மறைவு காட்டியதே இல்லை.

அந்த சிந்தனைப்போக்கில்

நம் தமிழ் இலக்கியத்தின் 

அரும்பெறும் கருவூலம் இவர்.

______________________________________

சொற்கீரன்

செவ்வாய், 7 ஏப்ரல், 2026

நாக்குறுதிகள்

 நாக்குறுதிகள்

________________________________


தேர்தல் விழா

களை கட்டி விட்டது.

அன்று

வாக்குறுதிகளாக‌

வலம் வந்தவை

இன்று

நாக்குறுதிகளாய்

எங்கு பார்த்தாலும்..

நாவுகளின்

நெளிவு சுழிவுகளை

சினிமா நோட்டீசுகளாய்

எங்கும் 

வாரி இறைக்கிறார்கள்.

ஆளுக்கொரு வீடு

அந்த சின்ன வீட்டுக்கும் 

ஒரு வீடு

என்று

வண்ண வண்ண பலூன்கள்

ஆகாசத்தில்.

மாநில சுயாட்சியாவது

மண்ணாங்கட்டியாவது

தமிழ் நம் ...

வேண்டாம் 

எதுக்கு பல்லை உடைத்துக்கொண்டு...

அது தான் கம்பியூட்டரில்

சமஸ்கிருத‌த்தை 

ஐஸ்கிரீம் ஆக்கித்தருகிறார்களே..

நம் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட.

அப்புறம்

எதுக்குத்தான்

இந்த 

கூட்டங்களும் பரபரப்புகளும்..

அது ஒரு "பேண்ட் வேகன்" சிண்ட்ரோம்...

மனிதர்களாய் இருப்பதை விட‌

நமக்கு

மந்தைகளாய் இருப்பதே சுகம்!

________________________________________

மந்தைதாசன்.

திங்கள், 6 ஏப்ரல், 2026

யாழ்

 

vannadaasanin kavithai paRRiya kavithai.

(muka nool 07/04/26)



முரண்பாடுகளின் சங்கீதமே

இந்த சமுதாய யாழ்!

எவ்வளவு ரத்தம் 

சொட்டிக்கொண்டிருந்தாலும்

அது வாள் அல்ல‌

யாழ் தான்.

___________________________________

சொற்கீரன்

அந்த "ஃபேன்"...

 


என் அறையில்

வெறுமே 

சுற்றிக்கொண்டிருக்கிறது

அந்த "ஃபேன்"...

கூச்சல் கிளப்பவில்லை.

கார் மீது பாய்ந்து

முன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு

உள்ளே போய்

ஃப்லையிங் கிஸ் வாங்கவில்லை

செல்ஃபீகளுக்கு மொய்க்கவில்லை.

இன்றைக்கே 

தன் கதாநாயக வடிவத்தை

அப்படியே கடித்து விழுங்கிவிட வேண்டும்

என்று பதறவில்லை...துடிக்கவில்லை.

பவுன்ஸர்கள் கைகளில் அள்ளி

குப்பையாக வீசிய போதிலும்

மனம் கலங்கவில்லை.

ஆங்கிலப்படங்களில் திகில் ஊட்டும்

வைரஸ் "சோம்பிகளாய்"

படையெடுக்க வில்லை.

இரண்டாவது "எம் ஜி ஆர்"எனும்

வெட்டுக்கிளிகளின் புயலா இந்த‌

ஜென்ஸி.

பிரெஞ்சு புரட்சியின்

கில்லட்டின்களா இவை?

வானமும் வேண்டாம்

விடியலும் வேண்டாம்

வெட்டிச்சாயுங்களடா

இந்த சித்தாந்தக் கரப்பான் பூச்சிகளை

எனும்

"வெறி ஆற்றின் வெள்ளோட்டங்களா இவை?

மக்கள் புற்றீசல்கள் அல்ல.

புயல்களின் கருப்பைக் கொத்துக்கள் இவை.

ஏதோ

எங்கோ இருந்து

இந்த கொப்புளிப்புகள்.

வழக்கமாய் சொல்லும்

இல்லுமினாட்டிகளின் கிலுகிலுப்பைகளா

இவை?

கனவுகளின் இமைகளுக்குள்ளா

இத்தனை அக்கினி வெள்ளம்?

என் அறையின் ஃபேன்

தட்டாப்பூச்சி போல் சிறகு அதிர்க்கின்றது.

சாதுவாய் பஞ்சுமிட்டாய்

கேட்டு சுற்றுகிறது.

____________________________________________

சொற்கீரன்

பெயத்தக்க நஞ்சுண்டு....

 பின்னூட்டம்.

FOR POEM  BY VANNADHASAN in READERS TRIBE/06.04.26\

வண்ணதாசன் அவர்களின் கவிதை பற்றிய கவிதை 

(முகநூல் ..04.04.26) " ரீடர்ஸ் ட்ரைப்ஸில் "

---------------------------------------------------------------------------------


பெயத்தக்க நஞ்சுண்டு அமையும்

நயத்தக்கவருக்கு

ஒவ்வாமை நோய் இருப்பது

தெரிந்திருந்தால்

அந்த ஹெம்லாக் விஷத்தை

அப்படியே ரா வாக‌

காக்டெய்ல் இல்லாமல்

சாக்ரடீசுக்கு

கொடுத்திருப்பார்களோ?

வரலாறு என்ன சொல்லுகிறது?

அது 

ரா வா?  காக்டெயிலா?

பின் நவீனத்துவம் 

கவிதை எழுத  காத்துக்கொண்டிருக்கிறது.


---------------------------------------------------------------

சொற்கீரன் .

சல்லாத்துணிகள்.

 



விரலில் விழும் பொட்டு

நம் 

மிச்சமா? எச்சமா?

ஊடகப்பறவைகள்

சிறகடித்ததில்

பொய்யின் நிழல்களே

நம் வரலாற்றை முழுதுமாய்

புதைத்து மூடும்

சல்லாத்துணிகள்.

மனித அவலங்கள்

நம் வண்ணக்காட்சிபெட்டிகளின்

அன்றாடக் கடைவிரிப்புகள்.

ஹிட் ரேட் அம்பு விளையாட்டில்

உண்மையே இங்கு படுகொலை!

___________________________________

சொற்கீரன்



கலாப்ரியா அவர்கள் கவிதைக்கு ஒரு கவிதை

 

முகநூல் ஸ்டோரியில் (21.03.26)
கலாப்ரியா அவர்கள் கவிதைக்கு ஒரு கவிதை
_____________________________________________
மழை பெய்த போது
விளையாடிய காகித கப்பல்
மழை பொய்த்த போதும் வருகிறது
பையனுக்கு.
இது கவிதை.
தகப்பனுக்கு
அப்போதும் இப்போதும் வருவது
எரிச்சல் மட்டுமே.
குழந்தைகள் பெரியவர்கள் ஆகும்போது
முன்பு
கவிதையோடு விளையாடியதை
தொலைத்துக்கொள்கிறார்கள்.
தாய் மட்டுமே
தன் குழந்தையோடு
எப்போதும்
விளையாடுகிறாள்.
கலாப்ரியா அவர்களின்
கவிதைக்காமிரா அருமை!
_____________________________________
சொற்கீரன்.

சாத்தான் குளம்

 




சாத்தான் குளம்

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________________‍


இந்த மரணங்களின்

உள்ளே 

ஓலமிட்டுக்கொண்டே

வெறி வளர்த்த‌

அந்த சாத்தான்கள் யார்?

குற்றம்

தண்டனை

தீர்ப்பு

இவை நம்

சமுதாயத்தின்

அடி நிழல்கள்.

அந்த நிழல்களின் முகங்கள்

முகங்கொடுத்து

ஒரு வட்டமேசையில் உட்கார்ந்து

பழைய ஏற்பாடுகளுக்கும்

பழைய ஏற்பாடாய்

அல்லது

புதிய ஏற்பாடுகளுக்கும் 

புதிய ஏற்பாடாய்

அல்லது

ஏதோ அந்த‌

வேதமும் கீதையும்

கலந்து பிசைந்த‌

வர்ண விகாரங்களின்

வர்ண அவர்ண கோட்பாடுகளாய்

மானிடவியல்  சாராம்சங்களை

எங்கோ எப்படியோ

புதைய விட்டு

மக்கிப்போனபின்னும்

எதோ

துளிர் விட்டிருக்கிறதே!

மரணங்களை

மரணங்களே

பாய்ந்து பிராண்டி

குதறிக்கொண்டு

என்ன வசனத்தை

இங்கு 

வாசித்துக்கொண்டிருக்க முடியும்?

இது

நம் கோவில்களும் கடவுள்களும்

வழிபாடுகளும்

குப்புற கவிழ்ந்து விட்டதை

நிமிர்த்திவைக்க இயலுமா?

இல்லை

சிலுவை மரங்களும்

கழு மரங்களும் தான்

மீண்டும் மீண்டும்

பேய்க்காடுகளாய் 

நம் வரலாற்று வடுக்களை

குத்திக்கிழித்துக்கொண்டிருக்குமா?

நுட்பமாய்

இது முரண்பாடுகளின் முரண்பாடுகளான‌

சமுதாயச் சித்திரங்களே!

__________________________________________

சொற்கீரன்.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

சொற்கீரன் கவிதைகள் II

 

சொற்கீரன் கவிதைகள்  II

___________________________________


ஜனநாயகம்

___________________________


79 ஆண்டுகளாய் 

எழுத்துக்கூட்டி எழுத்துக்கூட்டி

வாசித்துக்கொண்டிருக்கிறீர்களே.

பொருள் புரிந்ததா?

இல்லை

பொருட்படுத்தவே

இல்லையா?

____________________________(1)


கிளிக்குகள்.

______________________________


இந்த "பொறிகளின்"

ஆரண்யத்திலா

உங்கள் பொன்மான்கள்?


______________________________(2)


சீட்டுகள்

_______________________________



இந்த அரட்டைக்கிளிகளின்

சீட்டுகளிலா

உங்கள் அரக்கு மாளிகைகளின்

ஜோஸ்யங்கள்?


__________________________________(3)




வெள்ளி, 3 ஏப்ரல், 2026

பரல் நானூறு (8)

 பரல் நானூறு (8)

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________

சொற்கீரன்



வெம்பரல் நீடிய அத்தம் போகு

திரட்சுரம் திரங்கிய நீழல் கள்ளிய‌

ஆறு அலைபடும் கொல் தொழில் செறிய‌

பொருள்வயின் சென்றுழி கரைவீச்

சிறு பூ கண் கொடு விழிப்ப 

திரிமருப்பின் பொறிமா ஆங்கே அலமர‌

அவளின் காட்சியின் கிளர் நிழல் படுத்த‌

பொறியறை குடுமிய மலை ஓர் வானின்

உச்சியென ஏய்க்கும் இல் தோற்றி

நெடு நீர் காட்டும் அம்மவோ 

ஆண்டு அழல் ஓவு பறந்தலை நீர.

வறம் கூர்ந்த கானம் கல்லென‌

பாசடை கழிந்த தீப்பெரும் ஆறு

கல்லையும் தின்று வெயில் உமிழ்ந்தன்ன‌

காடு இடறு மலை படு கடாத்த‌

நீளிடை நிரம்பா அவிர் தூஉய்

பாழ்பட்டன்ன பல்லூழி இழைதரு

தடம் தடம் பதித்தான் பாவை நினைந்து.

_______________________________________________________


சிற்றுரை 

-------------------------------------------------------------------------------

பொருள் தேடிச்செல்லும் தலைவன் 

கற்பரல் இடறும் பாலை நிலத்திடையே

தீப்பிழம்பை வெயிலென ஊற்றும்

வழித்தடத்திலும் தலைவியை

நினைந்து காடுகள் இடையே

மலைகள் சூழ்ந்த கடுவெளிகளும்

கடந்து செல்வதை விவரிக்கும்

"பரல் நானூறு" எனும் 

சங்கச்செய்யுள் நடையில்

நான் எழுதிய கவிதைப்பாடல் இது.

_________________________________________

சொற்கீரன்



வியாழன், 2 ஏப்ரல், 2026

சொற்கீரன் கவிதைகள்

 

சொற்கீரன் கவிதைகள்

----------------------------------------------03.04.26



அமெரிக்கா இஸ்ரேல் ...

ஈரான் ....

அந்த ஏவுகணைகள் எல்லாம் 

பசித்தீயுடன் 

எங்கள் அடுப்புகளில்.

______________________________________1


சிவலிங்கங்களை

அங்கே கொண்டு போங்கள்.

மறைக்காதீர்கள்!

சம்போ மகாதேவ 

சிலிண்டர்களே 

நமோ நமக!

________________________________________2



மைக்குகள் முன்

வாயசைப்பவர்களுக்கு

குரல் கொடுப்பவர்களே!

இந்தக்காலத்து 

கணிப்பொறிகளுக்கு 

அந்தக்காலத்தில் 

சொல்வோம்

பாழுங்கிணறுகள் என்று.

உங்கள் குரல்களை 

அந்த கிளிக்குகளில் 

போட்டு விடுங்கள்.

செல்லரித்த அந்த உண்டியல் 

உங்களால் 

எப்போதாவது 

உடைக்கப்படும்போது 

பார்த்துக்கொள்ளலாம்.

________________________________________3

புதன், 1 ஏப்ரல், 2026

இன்னுமா....



(1)


எழுபத்தி ஒன்பது ஆண்டுகள்!

இன்னுமா

உன் சுதந்திரத்தை 

எழுத்துக்கூட்டி

வாசித்துக்

கொண்டிருக்கிறாய்?

அகர முதல என்று

ஆரம்பிக்கும் போதெல்லாம்

ஆண்டவனை உன் மடியில்

அமர்த்திவிடுகிறார்கள்.

அப்புறம் அந்த‌

சொர்க்கவாசல் தான்

உன் சோமபானங்கள்.

ஓட்டுக்கள் போட்டு போட்டு

உன் மிச்சமும் எச்சமும்

வெறும் புகை மூட்டமே.

________________________________________

சொற்கீரன்





(2)


நீரிணை.

__________________________________

இயற்கை

கடலில் கூட‌

உனக்கு வாய்க்கால்

வெட்டித்தந்திருக்கிறது.

அதில் ஏன் இந்த‌

காட்டுத்தீ?

முதலில் தீக்குச்சி கிழித்தவன்

யார் என்று

மரங்கள

நடத்திக்

கொண்டிருக்கின்றன

ஐ நா கூட்டம்.

_____________________________________

சொற்கீரன்