பக்கங்கள்

புதன், 18 மார்ச், 2026

ஜெயகாந்தன்.

மூடியை எடுத்து

இறுக மூடிக்கொண்டு

முடங்கிக்கொண்டது

அந்த பேனா.

அது அந்த இருட்டு யுகங்களின் பேனா.

இவன் 

உயிரெழுத்து அத்தனையும்

மூண்டெரியும்

நெருப்பெழுத்து.

கருப்பிடித்த நாளிலிருந்து

துருப்பிடித்துக்கிடந்த‌

சமுதாயம்

துலங்கித்தெரிந்த‌

தன் மனிதத்தை

உயிர்ப்பு கொண்டு

உயர்த்தித்தந்த 

மெய்யெழுத்துக்கள் அல்லவா

இவன் எழுத்து.

ஏனெனில்

இவன் ஜெயகாந்தன்.

__________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக