பக்கங்கள்

ஞாயிறு, 17 மார்ச், 2024

வெயில்

வெயில்

----------------------------------ருத்ரா.


வெயில் தன் 

குருட்சேத்திரத்தை 

தொடங்கி விட்டது.

சாலை ஓரங்களில் 

சிவப்பு சிதற சிதற

குருதியை கூறு கட்டி 

வைத்தாற் போல் 

வியாபாரத்துக்கு 

காத்து கிடக்கும்

தர்பூசணி பழத்துண்டுகள் 

வண்ணதாசன் 

கவிதைத் துண்டுகள் என 

ஈக்கள் மொய்த்ததாய் 

ஆம்...தேனீக்கள் 

மொய்த்ததாய் 

அந்த தூங்கு மூஞ்சிமரக் 

கிளைகளை சலசலக்க 

வைத்துக் 

கொண்டிருக்கி ன்றன.

---------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக