பக்கங்கள்

புதன், 10 பிப்ரவரி, 2021

காதல் என்று.

 


காதல் என்று.

_______________________________ருத்ரா


இருளை விதைத்தும்

ஒளியே முளைக்கும்.

நிலவுகள் உழுது

கனவுகள் விளைச்சல்.

பிறப்புகளினுள்ளும்

இறப்புகள் பிறக்கும்.

பிரம்மங்கள் கிழியும்

சன்னல்கள் தெரியும்.

அதில்

அவள் புன்னகை

உதிக்கும்.

காதல் உதிர்த்த‌

பிரபஞ்சம் கோடி.

இதில் நீ

எந்த தூசியில் 

எந்த துளியில்

முளைத்தாய் 

காதல் என்று!


______________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக