ஊசியிலைக்காடுகள்............ருத்ரா

சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்

▼

பக்கங்கள்

▼

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

சாவிகள்

355 of 1,622
 
 



சாவிகள் 
===============================ருத்ரா


ஆயுள்
பதினாலு வயதுடன் முடிந்து போனது.
அப்போது நான்
பட்டாம்பூச்சியின் வண்ணங்களுடன்
முடிந்து விட்டேன்.
நள்ளிரவில் சுவர்க்கோழிகளுடன்
சினிமாக்கள் பார்த்துவிட்டேன்.
தண்ணீர்த்திவலைகளின்
வைர மூச்சுகளில்
"முற்றும்"எழுதிவிட்டேன்.
வானவில் ஏழுகலரில்
பஞ்சு மிட்டாய் சுருட்டிக்கொடுத்த‌
இனிப்பில்
கரைந்து விட்டேன்.
ரோஜா இதழ்களை
மென்று தின்று இந்த‌
கனவுகளின் ருசி பார்த்து
வாழ்க்கை அகராதியின் அட்டையையும்
தாண்டிய சொல்லின் வேருக்குள்
சமாதி ஆகிவிட்டேன்.
அவன் விழியோடு மோதியதில்
தெறித்த தீப்பொறிகளில்
நான் சாம்பல் ஆகி விட்டேன்.
இதற்கு காதல் என்று
நெஞ்சில் பச்சை குத்தியபிறகு
கடந்து செல்லும் நாட்கள் எல்லாம்
கல்யாணம் கெட்டி மேளம்
கூடு குஞ்சு குளுவான்கள்
இரை தேடல்
இரை ஆதல் எல்லாம் கூட‌
அந்த அகராதி சொல்கிறது
மரணம் மரணம் மரணம் என்று தான்.
சங்கராச்சாரியார் பாடியதும்
இப்போது இனிக்கிறது.
ஜனனம் மதுரம்.
மரணம் மதுரம்.
பதினாலு வயதுக்குப்பிறகு
இந்த வயதுகள் எல்லாம்
சாவியாகிப்போன நெல்மணிகள்.
இருப்பினும் சாவி தேடுகிறோம்
வீடும் இல்லாமல்
வாசலும் இல்லாமல்
பூட்டிக்கிடக்கும் கதவுக்கு.

=======================================
ஏப்ரல் 2   2015 ல் எழுதியது.

ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 8:07 AM
பகிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.