சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே.
கனியப்போகும் கனவுகளோடு
தொடரலாம் நண்பர்களே! வாருங்கள்.
அன்புடன்
ருத்ரா இ பரமசிவன்
▼
பக்கங்கள்
▼
செவ்வாய், 25 பிப்ரவரி, 2014
வேண்டாம் வில் அம்புகள்.
இந்த ஊசியிலைக்காடுகளில்
மனிதர்களே மிருகங்கள்.
மிருகங்களே மனிதர்கள்.
சொற்கள் ஊசிகளாய்
இலை முகங்களில்
மறைந்திருக்கலாம்.
இந்தக்காட்டில்
வேட்டையாட வேண்டுவது
வில் அம்புகள் இல்லை.
அன்பும் அறனும் உடைத்த
பண்பும் பயனுமே அது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக